75 வய திலும் கதாநா யக னாக ந டித்த ஒ ரே நடி கர் இ வர் மட் டும் தா ன் ..!! இ வரு க்கு பிற கு தா ன் ரஜினி , க மல் எல் லா ம் ..!! யாரு ன் னு நீ ங்க ளே பாரு ங் க ..!! இ ணை யத் தை கல க் கும் தக வல் இ தோ ..!!
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கதாநாயகியாக நடித்தவர்களை விட கதாநாயகனாக நடித்தவர்கள் தான் பல வருடங்கள் சினிமாவில் பயணித்து வருகின்றனர் . இது எம்ஜிஆர் , சிவாஜி காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது . மேலும் அப்போது எம்ஜிஆர் அரசியலுக்கு சென்றதால் அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. இவரைத் தொடர்ந்து சிவாஜி வயதான பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் ஹீரோ கதாபாத்திரத்தை மட்டும் தவிர்த்து வந்தார்.
மேலும் ரஜினி 71 வயதிலும் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். இவரைப் போன்று கமலும் தன்னுடைய 67 வது வயதிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் . இப்படியொரு நிலையில் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக தன்னுடைய 75வது வயதில் ஹீரோவாக நடித்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தான். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார் . அதுவும் குறிப்பாக கவுண்டமணி , செந்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை காட்சிகளை,
இன்றளவும் ரசிகர்கள் ரசித்துப் கொண்டுதான் வருகிறார்கள் .பின்னர் ஒரு கட்டத்தில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார் .பின்னர் ஒரு சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய 75வது வயதில் 49-ஓ என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தார். இதனைத் தொடர்ந்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார் கவுண்டமணி.
இப்படி ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வந்த நடிகர்கள் கூட கிடைக்காத வாய்ப்பு காமெடி நடிகராக நடித்து வந்த கவுண்டமணிக்கு 75 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்…