ஐடிஐ மாணவர்கள் போராட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக..:
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியிலுள்ள, அரசு ஐடிஐ கல்லூரிக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது.
வ.உ.சி கல்லூரி மாணவர்கள் நேற்று காலை தர்ணா நடத்திய நிலையில், இன்று, ஐடிஐ கல்லூரியின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டெரலைட் ஆலையை மூட வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே தங்கள் ஒரே நோக்கம் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். சனிக்கிழமை மாலை பெரும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தியிருந்தனர் என்பபது குறிப்பிடத்தக்கது