நடி கர் மணி வண் ணன் நிஜத் தில் மிகி ப்பெ ரிய குடிக் கா ரர் ..!! இத னா ல் அவ ருடன் ப ணி யா ற்ற முடி யா மல் போய் வி ட்ட து ..!! பேட் டியி ல் உண் மை யை உடை த்த பி ர பல இயக் கு னர் ..!!

0 526

மணிவண்ணன் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் பாரதிராஜாவிடம் பணியாற்றி வந்த இவர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கி வந்த மணிவண்ணன் ஒருகட்டத்தில் நடிகராகவும் படங்களில் தோன்றினார் . மேலும் இவரின் நடிப்பிற்காக பல படங்கள் ஹிட்டடித்தது என்று கூட கூறலாம்.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்படியொரு  நிலையில் நடிகர் மணிவண்ணன் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார் . அந்த வகையில் அவர் கூறியதாவது,  மணிவண்ணன் சார் கதையை தயார் செய்த சில,

வாரங்களிலேயே படப்பிடிப்பை தொடங்கி விடுவார்.  மேலும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கும் திறமை கொண்டவர் மணிவண்ணன் . ஒருமுறை ஒரு படத்தின் படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன் . அதன் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அவரிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற ஆசையை கூறினேன் .

அதற்கு அவர் ஐஐடியில் சூட்டிங் இருக்கு நாளை அங்கு வா என்று கூறினார் . ஆனால் அது எங்கிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. அதனால் அவருடன் பணியாற்ற முடியாமல் போய்விட்டது. பின்னர் ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் விக்ரமன் சாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தேன்.

அப்போது சூரியவம்சம் படத்தில் நான் உதவி இயக்குனராக இருந்த போது மணிவண்ணனை மீண்டும் சந்தித்தேன் . மேலும் மணிவண்ணன் என்றால் அந்த படத்தில் சுந்தர்ராஜன் சாருடன் இவரும்  சேர்ந்து குடிக்கும் காட்சி தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும்.  ஆனால் மணிவண்ணன் நிஜத்திலும் மிகப் பெரிய குடிகாரர்.

படப்பிடிப்பு மட்டுமல்லாமல் எல்லோரிடத்திலும் குடித்துக் கொண்டே இருப்பார் ஒருவேளை இப்படி தொடர்ந்து குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் இவர் பல படங்களில் நடித்து சாதனை படைத்தார் என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் கூறியிருந்தார். இப்படி வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.