தன து ப ட த்தில் நடி த்த சிறு வர்க ளை 37 வரு டம் கழி த்து சந் தித் த நடி கை நதி யா ..!! அ ந்த சிறு வர் களுக் கே வய சா கிருச்சு போ ல , இவ ர் இ ன்னு ம் அப் படி யே தா ன் இரு க்கி றார் ..!! இணை யத் தை கல க்கு ம் வை ரல் புகை ப்பட ம் ..!!
தமிழ் சினிமா உலகில் 80களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா. தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது . அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள், உயிரே உனக்காக ,சின்னத்தம்பி பெரியதம்பி ,பாடு நிலாவே ,ராஜாதி ராஜா போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். பின்னர் ஒரு கட்டத்தில் தன்னுடைய வயதிற்கு தகுந்தாற் போல் அம்மா கதாபாத்திரம் ,
குணச்சித்திர கதாபாத்திரம் என்று நடித்து வந்தார் நடிகை நதியா .மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்திருந்த சிறுவர்களை முப்பத்தி ஏழு வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளார் நடிகை நதியா .அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தார் . இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் .
காரணம் அதில் நடித்த சிறுவர்கள் கூட வயதான நபர் போன்று இருக்கின்றனர் . ஆனால் அவர்களை விட நடிகை நதியா இன்னமும் இளமையாகவே இருந்து வருகிறார் . அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…