பல வரு டப் பிரச் சனை க்கு பிற கு நய ன்தா ராவு டன் இ ணை யும் பிர பு தே வா..!! அதுவு ம் இப்ப டி யொ ரு படத் தி லா ..?? இணை யத்தை கலக் கும் வைர ல் தக வல் ..!! ஆச்சி ரிய த்தி ல் ர சி கர் கள் ..!!

0 174

பிரபுதேவா ஒரு இந்திய திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ஆவார் . இவர் தன்னுடைய நடன திறமைக்காக இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று மக்களால் அழைக்கப்பட்டார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து வந்த பிரபுதேவா பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.  பின்னர் இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார் பிரபுதேவா .

குறிப்பாக இவரின் நடனத்திற்காகவே மக்களிடையே பெரிதும் அறியப்பட்டார் என்று கூட கூறலாம். இதனிடையே ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா . திருமணமான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் . இதன்பிறகு நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார் பிரபுதேவா.

பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களும் பிரிந்துவிட்டனர்.  இதன்பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் . இப்படி ஒரு நிலையில் நயன்தாராவும் பிரபுதேவாவும் ஒரே படத்தில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அந்த வகையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் மோகன் ராஜா . காட்பாதர் என்ற தலைப்பை கொண்ட இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்து வருகிறார்.  இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடன இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளாராம் பிரபுதேவா . இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்ற உள்ளாராம் பிரபுதேவா . இதன் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபுதேவாவும் , நயன்தாராவும் ஒரே படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.