இ ந்த ஜாதி என் ப தால் ரஜி னி படத் தில் இருந் து ஒது க்க ப்ப ட்ட பிர பல முன் ன ணி நடி கை ..!! இயக் குன ரின் மோ சமா ன செ யல் ..!! அதுவு ம் எ ந்த பட த் தில் தெரி யு மா ..?? வெளி யா ன உண் மை த க வ ல் உ ள் ளே ..!!
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்தோடு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்தவர் ரஜினிகாந்த் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது . ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த் . கிட்டத்தட்ட இந்த திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார் . கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் நாளைய தீர்ப்பு ,சிம்ம ராசி ,விரும்புகிறேன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.பின்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சீரியலில் நடித்து வந்தார்.
பின்னர் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்திருந்தார் . இதையடுத்து இந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சுகன்யா தானாம் .தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சுகன்யா ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார் .அப்போது தான் இவருக்கு காலா படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது .
ஆனால் அவர் பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக இயக்குனர் பா ரஞ்சித் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் சுகன்யா உயர்ந்த ஜாதி என்ற காரணத்தைக் காட்டி பா ரஞ்சித் அவரை நடிக்க வைக்க மறுத்து விட்டதாக பத்திரிகையாளரும் , நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…