உதடுகள் உச்சரிக்கும் கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா?

0 228

ஒவ்வொரு முறையும் போராட்டக் களமுணைகளில் போராளிகள் வீரச்சாவு அடையும்போது அவர்கள் உதடுகள் உச்சரிக்கும் கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா?

உலக வல்லாதிக்க நாடுகள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளுகின்ற நோக்கில் தமிழ் மக்களுக்காக போராடுகின்ற தமீழீழவிடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்தொழிக்கின்ற நோக்கில் செயல்படும் சிங்கள இனவாத அரசுடன் கூட்டுசேர்ந்து கொண்டு புலிகளுக்கு தடைமேல் தடை போட்டார்கள் ஒவ்வொரு முறையும் அந்த தடையை புதுப்பித்து அதை நீட்டிப்பதிலும் அவர்கள் பின் நிற்கவில்லை
அது மட்டுமா? ??

புலிகளை அழித்தொழிக்க இராணுவ வீரர்களை அனுப்பி வைத்தார்கள்,
ஆயுதங்களை வாரி வாரி வழங்கினார்கள்,
போர் விமானங்களை கொடுத்தார்கள்,
கப்பல்களை கொடுத்தார்கள்,
ரேடார் கருவிகளை கொடுத்தார்கள்,
விமான ஓடுபாதையை சரிசெய்து கொடுத்தார்கள்,
கோடி கோடியயாய் நிதிஉதவி செய்தார்கள்
இன்னும் பல……..

இதில் இந்தியா முதலிடம்
வேற நாடுகள் பெரிய கனரக ஆயுதங்களை கொடுத்துவிடக்கூடாது என்று நாங்கள் சிறியரக ஆயுதங்களை கொடுக்கிறோம் என்று விளக்கம் வேறு

அண்ணண் பிரபாகரனுக்கு யார் என்ன கொடுத்தார்கள்? ??

ஆயிரமாயிரம் போராளிகள் அவருக்காக அவர்கொண்ட இலட்சியத்திற்காக உயிரை கொடுத்தார்கள் உலகநாடுகள் கொடுத்த அனைத்தும் அவர்கள் மாறி மாறி போட்ட தடைகளும் விடுதலைப் புலிகளின் மனோபலத்திற்க்கு முன்னால் தோற்றுப்போனது.

ஒவ்வொரு முறையும் களமுணைகளில் போராளிகள் வீரச்சாவு அடையும்போது அவர்கள் உதடுகள் உச்சரிக்கும் கடைசி வார்த்தைகள் என்ன தெறியுமா?

அண்ணை பத்திரம்,அண்ணை பத்திரம்,அவர் கரத்தை வலுப்படுத்துங்கள் என்பதுதான் அது

பிரபாகரன் போன்று தமிழை நேசித்த தலைவனும் கிடையாது

பிரபாகரன் போன்று தமிழர்களை நேசித்த தலைவனும் கிடையாது

பிரபாகரனை போன்று தமிழர்கள் நேசித்த தலைவனும் கிடையாது

பிரபாகரனை போன்ற ஒரு வீரனை இனி எழுதப்படபோகும் வரலாறுகளும் தரிசிக்க போவதில்லை……

You might also like

Leave A Reply

Your email address will not be published.