தேனி காட்டுபகுதியில் நடந்தது என்ன..? பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஏன் சென்றார்கள்..?
தேனி மாவட்ட குரங்கணி பகுதி காட்டுத்தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவிகள்: 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைவு
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் டிரக்கிங் சென்ற 40 கல்லூரி மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த மாணவிகள், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் என்று தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே இருக்கும் குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கோடை காலம் என்பதால், போடி, பெரியகுளம், குரங்கனிஉள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மாலை நேரங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் குரங்கனி மலைப்பகுதிக்கு மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றனர்.
ஆனால், இன்று மாலையில் மாணவிகள் சென்ற மலைப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் 40 மாணவிகளும் சிக்கி இருப்பதாக குரங்கனி கிராம மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போடி, தேனி, உத்தமபாளையம் தீயணைப்பு துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
மேலும், தேனி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். குரங்கணி கிராம மக்கள், போடியைச் சேரந்த மக்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் மலைப்பகுதிச் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு, மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.