கல் யா ணம் பண் ணி வைக் கல னா இப் படி யே இரு ந்திரு வோ ம் ..!! சூர் யா ஜோதி கா கா தல் குறி த் து வெளி ப்ப டையா க கூறிய சிவ குமா ர் ..!! இணை யத் தில் வை ரலா கும் வீ டி யோ ப திவு ..!!

0 154

சிவகுமார் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் எம் ஜிஆர்,  சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ரோசாப்பூ ரவிக்கைகாரி, சிந்து பைரவி ,வண்டிச் சக்கரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே  பெரிதும் பிரபலமானார் என்று கூட சொல்லலாம் . இவருக்கு சூர்யா மற்றும் கார்த்தி என்று இரு மகன்கள் உள்ளார்கள் .

இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கலக்கிகொண்டு வருகிறார்கள் . இதில் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் .மேலும் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் ,

காக்க காக்க ,பேரழகன் ,மாயாவி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகர் சூர்யா . அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர்  பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் சூர்யா ஜோதிகாவின் காதல் குறித்த தகவலை கூறியிருக்கிறார். அந்த வகையில் அவர் கூறியதாவது , அந்த காலத்தில் ஒரு 150 படத்தில் நான் காதல் காட்சியில் நடித்திருக்கிறேன் . அப்படி பல நடிகைகளுடன் டயலாக் எல்லாம் பேசிவிட்டு தன்னுடைய பையன்,

ஒரே பெண்ணை காதலிப்பதற்கு அதுவும் நான்கு வருடமாக காத்திருக்கும் போது எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதிலும் கல்யாணம் பண்ணினா பண்ணிப்பேன் இல்லன்னா இப்படியே தான் இருப்பேன் என்று இருவரும் கூறியதால் தான் திருமணத்தை செய்து வைத்தோம் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் நடிகர் சிவகுமார்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.