திருமணம் முடிஞ்சதும் ஹனிமூன் போகல..ஆஸ்பத்திரிக்கு போனோம் புற்றுநோய் தாக்கிய மனைவியை நேசிக்கும் ஒரு காவ்ய காதல்

0 246

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு செல்லும் தம்பதிகள் பலரை பார்த்திருப்போம். ஆனால் தான் காதலித்து மணந்த ஆசை மனைவிக்கு திருமணம் முடிந்ததுமே புற்றுநோய் தாக்க, அவரை அள்ளி அணைத்து கவனித்து பாசத்தால் திக்குமுக்காட வைக்கிறார் ஒரு காதல் கணவர்.கேரளாவில் நடந்த சம்பவம் இது. கேரளத்தைச் சேர்ந்த சச்சினும்_பவ்யாவும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் முதலில் நட்பு உருவானது. காலப்போக்கில் அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு பவ்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்ப, அதனால் பிரச்னை வெடித்தது. கடைசியில் வீட்டு எதிர்ப்பையெல்லாம் மீறி இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.பவ்யாவுக்கு சில மாதங்களாகவே முதுகில் வலி இருந்து கொண்டே இருந்துள்ளது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தவே இல்லை. திருமணம் முடிந்ததும் சச்சின் தான் எதுக்கும் ஆஸ்பத்திரியில் போய் காட்டி வருவோமே என அழைத்துச் சென்றார்.

அப்போது தான் பவ்யாவுக்கு முதுகுத்தண்டில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ஆசையாய் காதலித்து மணந்த பவ்யாவுக்கு புற்றுநோயின் தாக்கத்தால் உடல் எடை குறைந்து, முடி உதிர்ந்து பொழிவு இழந்தார். ஆனால் அதையெல்லாம் சச்சின் சட்டை செய்யவே இல்லை. காரணம் அவர் பவ்யாவிடம் விரும்பியது மனதைத் தான். அவர் உடலை இல்லை என்கிறார் உருக்கமாக.

திருமணத்துக்கு பின்னர் அரசு வேலைக்கு செல்லும் லட்சியத்தோடு தனது உயர் படிப்பைத் தொடர்ந்து வந்த சச்சின், பவ்யாவுக்காக தனது கல்வி, அரசுவேலை கனவை தூக்கி எறிந்துள்ளார். அதுக்கு பதிலாக ஹிமோதெரபி சிகிட்சைக்கு மனைவி பவ்யாவை அழைத்துச் செல்வதிலும், அவருக்கு பணிவிடை செய்வதிலும் கவனம் செலுத்துகிறார்.

ஆதர்ச இந்த தம்பதிகள் காதலுக்கும் சேர்த்தே இலக்கணம் வகுத்து உள்ளனர் என்றால் அது மிகையாகாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.