மறைக்கப்பட்ட மறுக்கமுடியாத இன்றும் கன்னத்தில் அரையக்கூடிய பதிவு..!
ஒப்பற்ற புரட்சியாளன் பகத்சிங் தூக்கிலிடபட்ட தினம்…. மார்ச் 23.
”நான் மேரியின் கையினால் சாப்பிட விரும்புகிறேன்”.
சிறை அதிகாரிகள் தூக்கிலிடுவதற்கு முன் பகத்சிங்கின் இறுதி ஆசையை நிறைவேற்ற மேரியை அழைத்து வருகின்றனர்..
மேரி கலங்கிய கண்களுடன் பகத்சிங்கிடம் தன் கைகளை விரித்துக் காட்டி “இந்தக் கைகளால் உங்களுக்கு நான் எப்படி சோறு கொடுப்பேன்? என்று கதறுகிறாள்.
மேரி சிறையில் பணியாற்றும் கழிவறைகளை கைகளால் சுத்தம் செய்யும் பெண். மலங்களை கைகளால் அள்ளி அள்ளி அவள் கைகள் முழுவதும் புண்ணாக இருந்தது. இந்த கைகளால் எப்படி பகத்சிங்கிற்கு சோறு ஊட்டுவது என்றுதான் மேரி தயங்கினாள்.
அப்போது பகத்சிங் சொல்கிறார், “மேரி, எங்களின் போராட்டம் வெறும் அரசியல் மற்றும் பொருளாதர விடுதலைக்கான போராட்டம் மட்டுமல்ல, உன்னைப் போன்ற சகோதரிகள் சகோதரர்கள் மலம் அள்ளும் இழிநிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்கான போராட்டமும் தான்.
பகத்சிங் மேரியின் கைகளால் உணவு உண்டு இன்றோடு 87 வருடங்கள்.
மேரிகளின் வழித்தோன்றல்கள் இன்னமும் அத்தொழிலையே செய்யும் படி சாதீயம் அவர்களை சம்மட்டியால் அடித்துக் கொண்டே இருக்கிறது.
வாழ்க பாரதம்.
நன்றிகள் இயக்குனர் ராம்