மேற்குத்தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளில் ஒன்று மேகமலை. மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6 காட்டு யானைகள் பலியாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியால்தான் யானைகள் உயிரிழந்தன என வனத்துறை சொல்கிறது..!
வனப்பகுதியில் 20 முதல் 30 அடி உயரத்தில்தான் மின் கம்பிகள் செல்ல வேண்டும் என்பது தேசிய வன விலங்கு வாரிய விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மேகமலையில் 7 அடி உயரத்தில்தான் மின் கம்பிகள் செல்கின்றன.
பொதுவாக யானைகள், 11 முதல் 12 அடி உயரம் வரை வளரும். இதனால் யானைகள் இடம் பெயரும்போது மின் கம்பியில் உரசி உயிரிழக்கின்றன.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வனப்பகுதிகளுக்குள் செல்லும் மின் கம்பிகளை முறைப்படுத்த வேண்டும்”