கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவின் எதிரொலி இன்று 08-08-18 அன்று அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பசியால் வாடி சுற்றி திரிந்த ஆதரவற்ற நபர்களுக்கு போக்குவரத்து காவல்நிலைய காவலர் 1354 திரு.செந்தில்குமார் மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த சரவணகுமார், செல்வராஜ் ஆகியோர் மனதார மதிய உணவு அளித்து மகிழ்ந்த காட்சி
இன்றைய தினம் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறையில் இருந்த காக்கிகளையும் பணிக்கு அழைக்கப்பட்டு உண்ண உணவின்றி உறங்காமல் பணி செய்து எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழா வண்ணம் பணி செய்த அனைத்து காவல் சொந்தங்களுக்கும் மனதார பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
காவல் துறைமீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இதுபோன்ற சில சமயங்களில் நாம் போற்றி தான் ஆகவேண்டும்..!
இதனை பகிர்வது விமர்சிப்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம்..!