இளைஞர்களின் கையில் மதுவா..? புகையா..? போதையா..?

0 217

இளைஞர்களின் கையில் இந்தியாவா?

மதுவுக்கும், புகைக்கும், புகைக்குள் புதைக்கும் போதைக்கும், புகையிலைப் பொருள்களுக்கும், புற்றுநோய் பரப்பும் பாக்குக்கும், அடிமையாகும் இளைஞர்களை……,
இந்த சமூகத்திடமும், சந்தைப்படுத்தும், சமூக விரோதிகளிடமும்(வியாபாரிகள்)இருந்து இளைஞனை எப்படி மீட்கப் போகிறோம்.,?!

ஏய் நீதிமன்றமே வீதிக்கு வா

மதுக்குவளையில் நினைவைக் குடித்து, மதியிழந்து, சாலையோரம் அரைநிர்வாணமாய் நீந்தும்., மணவாளனைப் பார்…!
மார்தட்டுகிறான்..!
அரசாங்க கஜானாவில் அரைவாசி இவர்கள் தானாம்..!
மதிகெட்டவன்.., அதில் மீதி மங்கையர்களின் கண்ணீரும், மகள்களின் செந்நீரும் என்று..!

துகளெடுத்து சிகரெட்டில், தூள் சேர்த்து உள்ளிழுத்து, சாம்பல் தட்டாது சருகாகும் சாமானியனைப் பார்!

உள்ளங்கையில் புகையிலை தட்டி, ஒற்றை விரலில் உருட்டி, உதட்டினுள் வைத்து உமிழ்நீரைத் துப்பி உன்னையும், என்னையும் பெயரிடாத நோய்க்கு., பேர்காலம் பார்க்க அழைப்பதைப் பார்.,!

மதத்தாலும், ஜாதியாலும், நடிகனாலும், கட்சியாலும்,
தடம் புரண்டு,
வீரம் என்று, விளையும் போதே வினை சேர்க்கும் கூட்டம் பார்.!

விலங்குகள் குட்டிகளுக்கு பாலூட்ட மடு தந்தான்,
மனிதவிலங்குக்கு மார் தந்ததை,பாலுணர்வு தூண்டும் விதமாக படமெடுத்து, பாலியல் தொந்தரவுகளை பயிர் செய்யத் தூண்டும்., படங்களைப் பார்,!

ஏய் நீதிமன்றமே வீதிக்கு வா

போதைக்கு உணவளித்து முதலாளியாக்கி, இந்தியாவையும், இளைஞனையும், முடமாக்குவது பார்.! கருப்புத்துணி கட்டியிருப்பது நீதி தேவதை மட்டுமல்ல, நீதிவான்களும்..!

கண்ணீருடன்… N. பாஸ்கரன் ஆத்தியப்பன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.