மனிதனுக்கு மனிதன் அடித்து பிழைக்கும் நாட்டில் இப்பொடியொரு நிகழ்வு புகைப்படம் எடுத்தவர் யாரென்று தெரியவில்லை நிச்சயம் இது போன்று புகைப்படம் எடுப்பதற்கும் சிறிது இயற்கை மனம் வேண்டும்..!
உங்களில் எத்தனை பேர் குரங்கு உங்களின் அருகில் வரும் போது இதுபோன்ற இறக்க குணத்தை காட்டியுள்ளீர்கள்..? எங்கவது கோவிலுக்கு செல்லும் போது குரங்கு பிடிங்கிவிடும் என்று பயந்து குரங்கிற்கு சிறிது தேங்காய் துண்டு அல்லது வாழைப்பழமும் கொடுப்பீர்கள் ஆனால் காய்கறி விற்கும் இந்த பாட்டியிடம் அப்படி என்ன எதிர்பார்த்து இந்த குரங்கு அருகில் அமர்ந்தது யோசித்துப் பாருங்கள்..!
ஏதோ அந்த பாட்டியிடம் குரங்கு கேட்டு உள்ளது அது அந்த பாட்டிக்கு புரிந்துள்ளது அது அந்த பாட்டியிடம் இல்லை என்று கையை விரிக்கிறது இது உணவாகவும் இருக்கலாம்.!
ஒரு முறை பதவி கிடைத்தால் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் இந்த நாட்டில் தான் இதுபோன்ற பலரும் வாழ்கிறார்கள்..!
வெளியில் நீங்கள் ஆயிரம் பேசிக்கொள்ளலாம் வயதானவர்களுக்குத்தான் அரசாங்கம் ஆயிரம் கொடுக்கிறதே என்று அதே ஆயிரத்தை எந்த அரசியல்வாதியாவது வாங்கிக் கொண்டு வாழ தயாராக உள்ளான..?
இல்லை இந்த புகைப்படத்தை பார்த்த எவரும் தான் இந்த பாட்டி போன்று உள்ளவர்களும் காய்கறிகள்தான் வாங்குகிறீர்களா இரக்க பட்டு இங்கு எதற்காக போகிறது கரம் நீட்டுங்கள் இவர்களைப் போன்றவர்களிடம்..!
இது போன்று உள்ள பலர்களின் நிலையை உயர்த்துவதற்கு நீங்கள் இரக்கப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை முடிந்தவரை இவர்களைப் போன்றவர்களை பொருள்களையும் காய்கறிகளையும் வாங்குங்கள் விலை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருக்கும் பெரும்பாலும்..!
பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் பொருட்களையும் காய்கறிகளை வாங்கி கொண்டு இவர்களை பார்த்து இரக்கப்படுவதில் எந்த ஒரு நியாயமும் தர்மமும் இருக்கப் போவதில்லை..!
வணங்கும் கைகளைவிட கொடுக்கும் கைகளை உயர்ந்தவை
இல்லை இது தவறு என்றால் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள் இது போன்ற தகவல்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து மாற்றத்தை உண்டு பண்ணுங்கள்
நன்றி