ஆறு அறிவு என்று ஆணவத்தில் ஆடும் மனிதா என்னைவிட கொடுரமாக இருக்கும் உன் இறப்பு…!

0 522

சுட்டெரிக்கும் வெயிலும், சூடான காற்றும், தகிக்கும் நிலமும், இல்லாத நீரும் என மனிதன் கெடுத்த இச்சூழலில் ஊர்வன என்ன செய்யும்..?

பறவைகள் என்ன செய்யும்? கால்நடைகள் என்ன செய்யும்?

எரிமலை நெருப்புக் குழம்பாக வெயிலில் மாறிய நிலத்தில் பாம்பும் பல்லியும் எரும்பும் கீரியும் எப்படி ஊர்ந்து செல்லும்? அவைகளுக்கு செருப்போ, குளிரூட்டப்பட்ட அறையோ ஏதுமில்லையே.

கண்ணுக்கெட்டிய தொலைவு எங்கும் நீர் இன்றி தாகம் தணிக்க மைனாவும், கொக்கும் என்ன செய்யும்? அவைகளுத் தான் போர்(Borewell) போடத் தெரியாதே.

அசைபோட தீனி ஏதுமின்றி மூச்சு வாங்கி எச்சில் ஓழுகும் மாடுகள் என்ன செய்யும்? ஆர்டர் செய்தால் கொண்டுவந்து கொடுக்க தீவனம் என்ன பீட்சாவா?

நீலத்தை கெடுத்து, நீரை திருடி, காற்றை மோசம் செய்த மனிதர்கள் நாசமாய் போவதில் தவறேதுமில்லை.

ஆனால் மனிதனல்லாத பிற உயிர்கள் வாடுவதும், சாவது தான் பெருங்கொடுமை!

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லபோகிறாய் ஆறு அறிவு உள்ள ஆணவத்தில் ஆடும் மனிதா..?

உனக்கு ஆறு அறிவு என்று உன்னைதவிர வேறு எந்த ஒரு மிருகமும் ஒப்புக்கொள்ளாது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.