ATM மெசினில் ஊழல் பெருச்சாலிகள்..!

0 1,030

கள்ள நோட்டை கிழித்து உள்ளே வைத்து விட்டு எலியின் மேல் பழியை போடும் நூதனத் திருட்டாககூட இருக்கலாம்

அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது.

இந்த ஏடிஎம் வேலை செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு இருந்துள்ளளது.

ஆனால் அதில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த ஏடிஎம் எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை சரிசெய்ய, அதை பிரித்து இருக்கிறார்கள்.

அப்போதில் அதில் இருந்து பணம் கிழிந்து, மொத்தமாக கொட்டி இருக்கிறது. பணம் எல்லாவற்றையும் எலி கடித்து குதறி இருக்கிறது.

உள்ளே இருந்த 500, 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் நாசமாகி உள்ளது. இதனால் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது.

ATM மிசின் தரம் மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட ஊழல் பெருச்சாலிகளால் தான் ….
இந்த சின்ன எலி நுலைந்து வேலையை காட்டி உள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.