திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஆவாரை பயன்படுகிறது.
அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும்.
விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், ஆவாரைப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.
ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.
ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்
குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்… பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.
மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட் கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35 வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படலாம். காசநோயானது ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை உருவாக்கும்.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.