குழந்தையின்மைக்கு மருத்துவமனைதான் தீர்வா..? அல்லது வேறு எதும் தீர்வா..?

0 627

கருத்தரிப்பதில் தடை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இயற்கையில் பல வழிகள் உள்ளது.

குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும், அதனால் குழந்தையின்மை பிரச்சனைகள் உண்டாகலாம்.

அதிக மன அழுத்தத்தினால் சினைப்பை அடைப்பு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற காரணத்தினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

கருமுட்டையானது சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பெண்களின் குழந்தையின்மைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.


தடுப்பது எப்படி?

வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பை சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம் அல்லது வெள்ளைப்பூசணி சாறு எடுத்து குடிக்கலாம்.

ஆனால் கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.
காலை உணவுக்கு முன் சோற்றுக் கற்றாழை சாற்றை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சித்த மருத்துவரின் பரிந்துரையில் தயாரித்த சோற்றுக் கற்றாழை லேகியம் சாப்பிடலாம்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் குடிக்க வேண்டும். பயறு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்வதுடன், முறையாக யோகா செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை?

சத்துக்கள் இல்லாத ஜங் ஃபுட் உணவுகள், அளவுக்கு அதிகமான இனிப்புகள், சாப்பிடாமல் அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.