எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவாம்..!

0 365

இவனுங்களே விளம்பரம் போடுவாங்களான் இவனுங்களே தடை பண்ணுவாங்காலம்…!

யாரு காசு எல்லாம் மக்கள் காசு தானே பிறகு என்ன வாரி இறைங்க..!

1 நிமிட விளம்பர வீடியோ எடுக்க ₹1கோடி கணக்கு காட்டினாலும் ஆச்சரியமில்லை..!

எடப்பாடி சாமி பேருக்கு அர்ச்சனை’ என ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது.

அதில், கோவிலில் ஒரு பெண்ணிடம் அர்ச்சகர் யார் பெயருக்கு அர்ச்சனை எனக் கேட்க, அப்பெண் எடப்பாடி சாமி பெயருக்கு என முதலமைச்சர் பழனிசாமியை குறிப்பிட்டு கூறுவார்.

இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் இந்த விளம்பரத்தை வைத்து மீம்ஸ் போட்டு வந்தனர். அந்த மீம்ஸ்களும் வைரலாகியது.

இந்நிலையில் விமர்சனத்திற்குள்ளான இந்த விளம்பரம் குறித்து அரசின் கவனித்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் விளம்பரத்தை நீக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.