என் னது , பா கு பலி பட த்தில் கா லகே யனா க நடி த்தது இ ந்த த மிழ் நடி கர் தா னா ..?? இவ்வ ள வு நாளா இ து தெ ரி யாம போ ச்சே ..?? இணை ய த்தை கல க்கு ம் லேட் ட ஸ்ட் புகை ப்ப டம் ..!! இவ ரா என் று ஆச்சி ரிய மா ன ரசி க ர் கள் ..!!
கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாகுபலி. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான முதல் பாகம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபாஸ் ,அனுஷ்கா ,ராணா, தமன்னா ,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர் .
மேலும் இதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதையடுத்து பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் காலகேயனாக நடித்திருந்தவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் . தன்னுடைய நடிப்பால் மிரட்டிய அந்த நடிகரைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
அந்த வகையில் தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் பிரபாகர் . இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இவர் தமிழில் வெளியான கோடியில் ஒருவன், பொன்மாணிக்கவேல் , ஜெயில் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தமிழ் ,மலையாளம் ,ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருதையும் கூட வென்றுள்ளார் .
இப்படி ஒரு நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அட இவர் தான் பாகுபலி படத்தில் காலகேயனாக நடித்ததா .? எ ன்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்க …