வறு மை யா ல் சாப் பாட் டுக் கே வழியி ல் லாம ல் தவி த்து வ ரும் பருத் தி வீர ன் பட பாட் டி ..!! இத னா ல் வீட் டி லே யே முட ங்கி கிடக் கு ம் அவ ல நி லை ..!! வெ ளி யா ன வீடி யோ வை பா ர்த் து அதிர் ச்சி யா ன ரசி க ர்க ள் ..!!
கடந்த 2007ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பருத்திவீரன். அமீர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கார்த்தி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்திருந்தார் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
அதிலும் குறிப்பாக ஊரோரம் புளியமரம் என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இப்படி இந்தப் பாடலில் கார்த்திக்கு இணையாக கவனிக்கப்பட்டவர் தான் அந்த பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி காரியாபட்டி லட்சுமி அம்மாள். கலைமாமணி விருது பெற்ற இவர் ,
சில ஆண்டுகளுக்கு முன் வறுமையின் பிடியில் இருந்துள்ளார் . அதுவும் மருத்துவ தேவைக்குக் கூட வழியில்லாமல் தவித்து வந்துள்ளார் லட்சுமி அம்மாள் .ஒழுகும் வீட்டில் பெற்ற விருதுகளை வைக்க கூட இடம் இல்லாமல் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வறுமையில் வாடுவதாக செய்திகள் பரவியது .
இதைக் கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி ரசிகர் மன்றம் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளனர் . அது மட்டுமின்றி அவருடைய மருத்துவ செலவிற்கு மாதம் தோறும் தொடர்ந்து உதவுவதாகவும் கார்த்தி கூறியுள்ளாராம் .இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு,
பேட்டி கொடுத்திருந்த லட்சுமி அம்மாள் கூறியதாவது, மூணு வருஷத்துக்கு முன்னாடி உடம்பு சரியில்லாம போச்சு , சினிமாவுல கார்த்தி தம்பி மட்டும் தான் எனக்கு உதவி பண்ணு ச்சு என்று கூறியிருந்தார் லட்சுமி அம்மாள் . மேலும் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதால் கச்சேரிக்களுக்கும் திரும்ப சென்று உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ,
மகன்கள் கூறியதால் , வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறாராம் லட்சுமி அம்மாள். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மூலம் மட்டுமே தன்னுடைய வாழ்வாதாரம் இருப்பதாகவும், சினிமா வாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார் . தற்போது அவர் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது…