ரஜி னி யே வேண் டா மெ ன்று ஒது க் கிய பட ம் ..!! பின் னர் அ தி ல் ந டித்து மார் க்கெ ட்டை யே இழ ந்த பிர பல ந டி கர் ..!! அது வும் எந் த பட ம் தெ ரி யுமா ..?? வெ ளி யான முக் கிய த க வ ல் உ ள் ளே ..!!
தமிழ் சினிமா உலகில் அன்று முதல் இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இவரின் படங்கள் வெளியாகிறது என்றால் ரசிகர்களுக்கு திருவிழாக்கோலம் என்ற சொல்லும் அளவிற்கு இவரின் படங்களை கொண்டாடி வருகின்றனர். மேலும் ஒரு கட்டத்தில் ரஜினிகாந்திற்கு முத்து , படையப்பா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து வந்தவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இதன் பிறகு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பாபா என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் . ஆனால் இந்தத் திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது . இதனால் மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,
மீண்டும் கே எஸ் ரவிக்குமாரின் கூட்டணியில் இணைந்தார் ரஜினிகாந்த் . ஜக்குபாய் என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் வரை நடைபெற்றது . அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
பின்னர் திடீரென இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று விலகிவிட்டார் ரஜினிகாந்த் .மேலும் ஜக்குபாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினிகாந்த் ஆப்கானிஸ் தான் தீவிரவாதி போல் உடையணிந்து துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டிருக்கும் போஸ்டர் வெளியானது .
இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து ஜக்குபாய் படத்தின் முதல் பாதி கதையை எழுதிவிட்டோம் , ஆனால் இரண்டாம் பாதியின் கதை எழுதும் போது எப்படி பார்த்தாலும் பாட்ஷா படத்தின் கதை போலவே இருந்தது . அதனால் தான் இப்படத்தை நிறுத்தி விட்டதாக கூறினார்கள்.
இதன்பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் ஸ்ரேயாவை வைத்து ஜக்குபாய் திரைப்படத்தை இயக்கி இருந்தார் கேஎஸ் ரவிக்குமார். இப்படி வெளியான இந்த திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது . அதுமட்டுமல்லாமல் இந்த படத்தால் நடிகர் சரத்குமாரின் சினிமா மார்க்கெட்டும் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது…