தமிழ்நாட்டில் குறிப்பிட்டு இயற்கை வளங்களை அழிப்பதன் ரகசியம் இதுவா..?
வடமாநிலங்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து நாட்டுக்கு அளிக்கும் வருமானத்தை விட தமிழகத்தின் வருமானம் அதைவிட அதிகம்.
இந்தியாவிலேயே அனைத்து வளமும் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்திய நாட்டுக்கு வருமானத்தை அளிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.
1960-ம் ஆண்டு இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருந்தது. ஆனால் இன்று இந்தியாவின் முதல் 5 பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஒருவேளை இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை தனியாக பிரித்தால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதளம் ஆய்வு ஒன்றை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை தொட்டால் இந்தியாவின் அழிவு அப்பவே ஆரம்பமாகும் என உளவு அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 2013ம் ஆண்டு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் வெளியே விடாமல் அப்போதைய அரசு மறைத்து வைத்துவிட்டதாக தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் உண்மை தன்மை நிரூபணம் செய்யப்படவில்லை.
சாப்பிடுவதற்கு அனைத்து உணவு பொருட்கள் முதல், ராக்கெட்டுக்கு தேவையான பொருட்கள் வரை தமிழகத்தில் கிடைக்கின்றன.
ராணுவத்துக்கு தேவையான துப்பாக்கி, மற்றும் டாங்கி தொழிற்சாலை, ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறையில் வளர்ச்சி கண்டது தமிழ் சினிமாதான்.