யானைகளின் தொடர் மரணங்கள் உங்களுக்கு சொல்வது என்ன என்றால் உங்களின் இயற்கை வளம் இறந்து கொண்டு இருக்கின்றன என்னும் செய்தியையே… :
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தளி வனப் பகுதிக்கு உட்பட்ட தாசிரப்பள்ளி என்ற இடத்தில், 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. உடல் பரிசோதனைக்குப் பிறகே, யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
தேன்கனிக்கோட்டை அருகே, தொளுவபெட்டா என்ற இடத்தில் நேற்று ஒரு பெண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை மற்றும் தளி வனப் பகுதிகளில் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன.
கோவை, ஆனைகட்டி அருகே உள்ளது சோலையூர் கிராமம். இன்று, அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில், ஆண் யானை ஒன்று பழம் பறிக்க முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக யானையின் கால் மரக்கிளையில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய யானை, கீழேவிழுந்து பரிதாபமாக இறந்தது. இந்தச் சம்பவம், சோலையூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது