தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவரது மகன் துருவிக்ரம் சினிமாவில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தமிழில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அடுத்ததாக அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல்
ஓ டி டி வலைதளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு அடுத்தபடியாக இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க போகின்றார். மேலும், இயக்குனர் மாரீஸ்வரர் மாமனார் திரைப்படத்தின் பிஸியாக இருந்து வருவதால்
கணேஷ் பாபு என்ற இயக்குனர் இயக்கத்தில் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், அந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கு அவருக்கு கிட்டத்தட்ட
ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அறிந்த பல முன்னணி நடிகர்களை தோல்வி திரைப்படத்தை கொடுத்து வரும் இவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமா? என்று அதிர்ச்சியாகி உள்ளார்கள்…