தமிழில் சிறுவர் புத்தகங்களில் மிகவும் பிரபலமான கதை தாகம் தீர்த்த காக்கா.காக்கா ஒன்று மிகவும் தாகத்தோடு தண்ணீரை எல்லா இடங்களிலும் தேடி கொண்டிருக்கும் . அப்பொழுது ஒரு பானையில் தண்ணீர் மிகவும் அடியில் இருக்கும். அதை எப்படியாவது மேலே கொண்டு வருவதற்காக காகம் பக்கத்தில் உள்ள கற்களில் ஒன்று ஒன்றாக எடுத்து அந்த பானையில் போடும். அதன் பிறகு தண்ணீர் மேலே வரும். அந்த தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காக்கா.இந்த கதை அனைவரும் அறிந்ததே. இதை இதுவரை அனைவரும் பாட புத்தகத்திலும் அனிமேஷன் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த கதை தற்பொழுது ஒரு பறவை நிஜமாக்கி உள்ளது.இந்த லாக்டோன் காரணத்தினால் பல மக்கள் உணவின்றி தவித்து உள்ளனர் .அதுபோலவே வனப் பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு வேண்டிய அளவு உணர்வு அளிக்க முடியவில்லை.
இதன்காரணமாக விலங்குகள் பறவைகள் பசிக்காக தவித்தது தண்ணீர் இன்றி தவித்த ஒரு குருவி தண்ணீர் தாகத்திற்காக சாலையில் உள்ள ஒரு வாட்டர் பாட்டிலில் நீரை கண்டவுடன் அதில் சிறு கற்களை போட்டு நீர் அருந்தி உள்ளது நாம் பாடப் புத்தகத்தில் உள்ள கதை காகம் ஒரு ஜாடிக்குள் கல்லை தூக்கிப் போட்டது நீரும் மேலே வந்தது தாகம் தீர்ந்து போனது என்று கதை கேட்டிருப்போம் அந்தக் கதை உண்மைதான் போல அதற்கு இந்த காணொளி போதுமானது
பறவை ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் முயல்கின்றது. சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்துக்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
The Crow (magpie) and the Pitcher – Aesop’s Fables https://t.co/NQ1Z3Ksp5o
— Aaron Kornblith (@AaronKornblith) November 15, 2020