சீரியல் பாக்கும்போது பச்ச தண்ணி கூட கிடையாது.மணப்பெண்ணின் விவகாரமான கண்டிசன் பேனர்..! வைரலாகும் புகைப்படம்
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடிபுதூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், இவர்களின் திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் தான் தற்போது படு வைரலாக பேசப்பட்டு வருகிறது.அதில், மணப்பெண்ணின் கண்டிசன்கள் என்று ஒரு 11 கண்டிசன் போடப்பட்டு மணமகன் கையெழுத்து போடப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கண்டிசனில்,
1. உன்னுடைய மனைவி நானாகிறேன்.மற்றொரு காதலி உனக்கு இருக்கக்கூடாது.
2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது,அவளுடைய அழகை வர்ணிக்க கூடாது.
3.இரவு 8.30 மணிக்கு கிச்சன் குளோஸ்.4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ்.
5.தேங்காய்எண்ணெய்,சோப்பு,ஷாம்பு,துண்டு ஆகியவற்றை சொந்தமாக எடுத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்,அதற்காக தொந்தரவு செய்ய கூடாது.
6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி,பழைய சாப்பாடாக இருந்தாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்
7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.
8. சாயங்காலம் 6.30 முதல் 9.30வரை சீரியல் டைம்.கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.
9. உறக்கத்தில் குறட்டை விடவோ சத்தம் போடவோ கூடாது.
10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.
11. மிக முக்கிய குறிப்பாக என்னிடம் கோபப்பட்டால் எனது அண்ணன்களிடம் இருந்து தர்ம அடி விழும்.
மேலே கூறப்பட்ட பதினோரு கண்டிஷன்கள் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தது இந்த 11 கண்டங்களுக்கும் மணமகன் ஸ்ரீதர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் அவரது ஆதார் கார்டும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த பேனர் வைரலாக பரவி வருகிறது