இருபது வருடத்திற்கு பின்னால் தண்ணீர் இல்லாத இந்தியா எப்படி இருக்கும்…?
இதோ கவிதையின் மூலம் சொல்கிறேன்..!
கவிதையின் தலைப்போ கால எச்சரிக்கை
வயல்களுக்கும் வந்துவிட்டது பித்தவெடிப்பு..!
நச்சுகாற்றும் வந்துவிட்டது வயதிற்கு..!
இனி வாசல் தெளிக்க கடல் தண்ணீர் தேவைப்படலாம்..!
குடிக்க கழிவுநீர் கூட கிடைக்காமல் போகலாம்…!
சுடுகாட்டின் பெயர் பிணக்கிடங்கு என மாற்றப்படலாம்..!
இனி கடல் உள்வாங்கும் உன் உயிர் உன்னையே குடிக்கும்..!
தெய்வம் கற்கலில் இல்லையென்று ஒரு சிலரால் நீயும் நம்பும் நிலமை உண்டாகும்..!
உன் பிள்ளையை பெற்றெடுத்த உன் மனைவியின் மார்பில் தாகம் தணிக்க உன் தகப்பன் பால் கூட கேட்கலாம்…!
மரங்களை வெட்டிய நீ பழங்களை தேடுவாய்..!
குளங்களை மூடிய நீ உன் வீட்டார் பிணங்களை தேடுவாய்..!
கால முடிவில் சாக தூக்கு கயிரை கட்டக்கூட சக்தியில்லாமல் போகலாம்..!
இப்பொழுதே விழித்துக்கொள்
வயல்களுக்கும் வந்துவிட்டது பித்தவெடிப்பு…!