எமனையே போராடி வீழ்த்திய குழந்தை. உள்ளங்கை அளவில் பிறந்த குழந்தை.. இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க!

0 690

சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும் என ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கைப் போலத்தான் வாழ்க்கையும்! அதேபோல் பிறக்கும்போதே சாவதைப் போல் க ஷ்டத்தை அனுபவித்த குழந்தை ஒன்று இப்போது செம கெத்தாக தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் காட்சி தன்னம்பிக்கையை தூவுகிறது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த இசபெல்லா தான் அந்த குழந்தை. கருவில் இருக்கும்போதே குழந்தை வளர, வளர தாய், சேய் இருவருக்கும் ஆ பத்தென 24 வாரத்திலேயே அவசரமாக ஆப்ரேசன் செய்து வெளியே எடுக்கப்பட்டார் இசபெல்லா. அப்போது இசபெல்லா உள்ளங்கை அளவில் தான் இருந்தாராம்!மருத்துவர்களோ 95 சதவிகிதம் இந்த குழந்தை உயிர் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என சொன்னார்கள். குழந்தையை அள்ளி அணைக்கவோ, கொஞ்சவோ ஒரு மாதத்துக்கு முடியவில்லை. காரணம் அவ்வளவு உடல் மெலிந்து இருந்ததுதான்!குழந்தை பிறந்த மூன்றே வாரத்தில் குடலிலும் பிரச்னைவர, இரு அறுவை சிகிட்சைகளையும் எதிர்கொண்டார் இசபெல்லா.

கண்ணுக்கும் லேசர் சிகிட்சை நடந்தது. இப்படி உயிருக்கே உத்திரவாதம் இல்லாமல் இருந்த இசபெல்லா இப்போது 13 பவுண்ட்கள், 7 அவுன்ஸ் உடன் நல்ல உடல் எடையோடு இருக்கிறாள்.இப்போது நல்ல எடையோடு இருக்கும் குட்டி தேவதை இசபெல்லாவை அவரது தாய் கிம்பிரெளனும், தந்தை ரயான் இவான்சும் வீட்டுக்கு கூட்டிப் போயிருக்கிறார்கள்.

இதுவரை ஆஸ்பத்திரியிலேயே சுற்றிவந்த இசபெல்லா இப்போது வீட்டில் தவலவும் , எழுந்து நிக்கவும் முயல்கிறாள். இப்போதெல்லாம் இசபெல்லா நன்றாக சிரிக்கவும் செய்கிறாராம். இதை சொல்லி, சொல்லி இப்போது நெகிழ்கிறார் இசபெல்லாவின் தாய்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.