எல்லாவித செடி கொடிகளும் மரங்களும் மலர்வதை/பூப்பதைக் காணமுடியும்…ஆனால் அத்தி மரம் பூப்பதைக் காணமுடியாது…
பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரவகையைச் சேர்ந்தது அத்தி ஆகும்…ஆகவே அத்திப்பூக்களை எந்நாளும் பார்க்கவே முடியாது…எனவேதான் அரிதாக, அதிசயமாக நடக்கும் நிகழ்வுகளை அத்திப்பூத்தாற்போல என்றுக் குறிப்பிடுவார்கள்…
இவ்வாறு பூக்காமல் காய்க்கும் மரங்களான அத்தி, ஆல், பலா, அரசு முதலிய மரவகைகளை பழந்தமிழில் கோளி என்று சொல்வர்…