இந்த உலகில் சுமார் 2700 வகையான பாம்புகள் இருக்கின்றன. நமது இந்தியாவில் 272முதல் 275 வகையான பாம்புகளும் இருக்கின்றன.
அதில் 7 வகையான பாம்புகளுக்கு மட்டுமே
மனிதர்களைக் கொல்லக்கூடிய வித்தன்மை உள்ளது. அதிலும் 4 வகையான பாம்புகள் மட்டுமே நிலப்பரப்பில் வாழ்பவை
1. நாகப்பாம்பு
2.கண்ணாடிவிரியன்
3.சுருட்டை விரியன்
4. கட்டு விரியன்
மீதமுள்ள 3 வகையான பாம்புகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருப்பவை.
1. ராஜ நாகம்
2.குளிப் பாம்பு
3. பவளப்பாம்பு
இந்த 7 வகை பாம்புகளைத் தவிர நடு நிலை விமுள்ள பாம்புகளும் உள்ளன. (Mild venom)
1.பச்சைப் பாம்பு
2.பூனைப் பாம்பு
3.பறக்கும் பாம்பு
இந்த வகையான பாம்புகள் சிறு உயிரினங்களை மயக்கமடையச் செய்து, தனக்கான உணவைச் சேகரிக்கக் கூடியவை. இது போன்ற பாம்புகள் மனிதர்களைத் தீண்டினால் தொற்று நோய்
ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம் என்றார்.
விஷமற்ற பாம்பு வகைகள்
மேலே கூறப்பட்ட பாம்பு வகைகளைத் தவிற மற்ற அனைத்தும் விமற்றவையே. அதில் சில
1. சாரைப்பாம்பு
2.தண்ணீர்ப் பாம்பு
3.கொம்பேரி மூக்கன்
4. மலைப்பாம்பு
5. குட்டைப் பாம்பு – சுருட்டை விரியன் பாம்பும் குட்டையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஷமுள்ள பாம்பு
நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய பாம்புகள் (neuro toxin venom)
1.நாகப் பாம்பு
2. கட்டுவிரியன்
3. ராஜ நாகம்
4. பவழப் பாம்பு
அதே போல் நாகத்தில் இரண்டு வகைகள் உள்ளன. தென் இந்தியா மற்றும் வட இந்தியா நாகம்.(Mono cled cobra) (”U” shaped spectacle cobra)நீர் வீழ்ச்சி நாகம் (Falls cobra)
நடுநிலை விஷமுள்ளது
கருநாகம் – பாம்பு முழுவதும் கருப்பாக இருக்கும்
மஞ்சள் நாகம் – பாம்பு முழுவதும் மஞ்சளாக இருக்கும்.
ராஜ நாகம்நாகங்களில் மிக நீளமாக வளரக்கூடியது.
உலகிலேயே அதிக விம் உள்ள பாம்பு இதன் உணவு பாம்புகள் மட்டுமே சாரைப் பாம்புகளுக்குப் பிடித்த உணவு எலிகள், ஆகவே எலிகளைப் பிடிக்கச் சாரைப் பாம்புகள் வயல் வெளிகளில் சுற்றித் திரியும்
விஷத்தின் வேறுபாடுகள் (நாகம் மற்றும் ராஜநாகம்)
ராஜநாகப் பாம்பின் வி வீரியத்தை விட நாகத்தின் வி வீரியம் அதிகம்.
ஆனால் அதன் அளவுகளிலே வேறுபாடு உள்ளது அதாவது ராஜநாகத்தின் வி வீரியம் குறைவானாலும் அதன் அளவு (நச்சு நீர்) அதிகம். அதுவே நாகத்தில் வி வீரியம் அதிகமானலும் அதன்
அளவு (நசசு நீர்) ராஜநாகத்தை விடக் குறைவு.
பவளப் பாம்பு – வித்தின் வீரியம் அதிகம்
சுமார் இரண்டு அடி வரை இருக்கும்.
நாகத்தை விடப் 16 மடங்கு வித்தின் வீரியம் அதிகம்
இரத்த நாளங்களைத் தாக்கும் பாம்புகள்
1.சுருட்டை விரியன்
2.கண்ணாடி விரியன்
பாம்பு தீண்டிய பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
பாம்பு கடித்த இடத்தில் வலி மற்றும் கடுகடுப்புத் தன்மை இருக்கும், அதிலும் நரம்பு மண்டலங்களைத் தாக்கும் பாம்புகளை விட, ரத்த நாளங்களைத் தாக்கும் பாம்புகளே அதிக வலி ஏற்படுத்தும்
என்கிறார்.
முதலில் கடி பட்ட இடத்தைக் கட்டுவதோ அல்லது கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைப் பயன் படுத்துவதோ, வாய் வைத்து உறிஞ்சுதல் போன்ற எந்தச் செயல்களும் செய்தல்
கூடாது. பாம்பு தீண்டியவர்களைப் பதட்டமடையச் செய்தல் கூடாது. பாம்பு தீண்டிய இடத்தினை,கை கால் உடம்பு போன்ற எந்த உறுப்பாக இருந்தாலும் அசைக்காமல் அருகில் உள்ள
மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்லுதல் அவசியம்.
அதிலும் திரு.ரத்தீஷ் அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவ மனையே சிறந்தது. அங்கு ஒவ்வொரு நாளும்
சுமார் 2 நபர்களையாவது பாம்பு தீண்டியவரைக் காப்பாற்றி வருகிறார்கள். ஆகவே அவர்களக்கு மிகுந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. என்றும் விளக்கினார். (இதில் முக்கிய குறிப்பாக பாம்பை தீண்டிய நபரை முதலில் அருகாமையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்லுதல் அவசியம்) மேலும் ஒரு தகவலைத் தந்தவராக ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில்
அமைந்துள்ள தன்வந்திரி மருத்துவமனையைக் குறிப்பிட்டார். அங்கு டாக்டர் திரு.கணபதி டாக்ளாகாலஜீ (நச்சு முறிவு) ஸ்பெலிஸ்ட். இது போன்ற பாம்புக் கடியைக் குணப்படுததுவதில்
சிறப்பு வாய்ந்தவர் என்றம் தெரிவித்தார்.
(பாம்புகள் பழி வாங்கும் என்பது மூட நம்பிக்கையே).
பாம்பு பால் குடிக்காது,பாம்புக்கு ஜுரண சக்தி மிகவும் குறைவு
பாம்பு கடி பட்ட இடத்தில் கிருமி நாசினி (antibiotic), மஞ்சள், சோம்பு, டெட்டால் கொண்டுசுத்தம் செய்ய வேண்டும்.
பார்ப்பதற்குக் குட்டை பாம்பும் கட்டு விரியனும் ஒன்று போல் இருக்கும்.
பாம்புக்குக் காது கிடையாது.
உலகிலேயே கூடு கட்டி வாழும் பாம்பு ராஜநாகம் மட்டுமே (முட்டையிடும் காலம் மட்டுமே –
மூங்கில் காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிப் பகுதிகள்)
சாரை மற்றும் நாகப் பாம்புகள் சுமார் 14 வருடம் முதல் 16 வருடம் வரை உயிர் வாழும்தற்போதைய சூழ்நிலையில் சுமார் 7 வருடம் என்பதே சவாலாக இருக்கிறது என்று கூறினார் -சுற்றுப்புறச் சூழல் காரணமாக இந்த நிலை உள்ளது.
கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், மண்ணுளி, பச்சைப்பாம்பு போன்ற வகைகள் குட்டி போடுபவை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிப்பு நடப்பதனாலே சுற்று சூழல் பாதிக்கப்படுவதாகவும் நகரங்களுக்குள் பாம்புகள் நுழைவதும் நடக்கிறது
‘அனகோண்டா’ வகை பாம்புகள் நஞ்சற்ற வகைகள் (non venoms) ஆகும்.
விவசாயிகள் கவனத்திற்கு
விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோழிகளை வளர்க்கலாம். இவைகளால் பாம்புகளைப் பிடிக்காவிட்டாலும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும். மேலும் இரவு நேரங்களில்
கையில் மின் விளக்கு மற்றும் தடி மூலம் நிலத்தைத் தட்டி ஓசை எழுப்புதல் (அதிர்வலைகள் எழுப்புதல்) காலணி பயன்படுத்துதல் (பி.வி.சி. காலணிகள் – கோவை மாவட்டம் – காவலர் சீறுடைகள் விற்பனைக் கடைகள் – காட்டூர் வீதி (பாப்பநாயக்கன்பாளையம்) – காக்ஸ் வீதி (கோவை) போன்ற முறைகளால் நாம் தற்காத்துக் கொள்ள முடியும் மேலும் பாம்பு என்பது. மனிதனின் உணவுச் சங்கலியில் அதற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு ஆகவே, பாம்புக்குப் பாதுகாப்பு அளித்திட அனைவரும் முன்வர வேண்டும்
பாம்புக்குப் பால் ஊற்றுவதற்கும் முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன?
உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட வியமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்,ஆதிகாலத்தில் மனிதனுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தவை பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனைவிடப் பாம்புகள் அதிகமாகக் காணப்பட்டன.
ஒரு உயிரினத்தைக் கொல்லும் உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமானது.பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒரு வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும்அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.
பெண் பாம்பு வாசனையைக் கட்டுப்பத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனையைத் தடுக்கிறது. ஆகவே,அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது