தக்காளி நீண்ட நாள் அதாவது அதிகபட்சமாக நான்கு நாள் வரை மட்டுமே சேமித்து வைக்கக்கூடிய ஒரு உணவு தற்பொழுது பலவித விதைகள் மூலம் பல மாதங்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்
இவை அனைத்திற்கும் உடலுக்கு கேடு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
சரி ஏன் தக்காளி சில சமயம் குப்பை கொட்டப்படுகிறது சில சமயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது உணவுப் பொருட்களில் அரசியல் என்று கூறினால் ஏளனமாக நினைப்பீர்கள் ஆம் உண்மையிலேயே அரசியல் தான் நடக்கிறது வியாபார அரசியல்
ஒரு விதை நிறுவனம் நினைத்தால் ஒரே ஆண்டில் ஒரு நாட்டில் பஞ்சத்தை உருவாக்க முடியும் உங்கள் சிந்தனைக்கு எட்டாத இதுதான் தற்போது உள்ள விதை நிறுவனங்கள் அனைத்தும் இதன் கையாள்கிறது
விதை நிறுவனங்கள் மாபெரும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தொடர்பில் இருக்கும் அதாவது தக்காளி சார்ந்த உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தக்காளி அதிக தேவை எனும்போது அதிக காய்க்கும் விதைகளை விவசாயிகளுக்கு விதை நிறுவனங்கள் பரிந்துரை செய்யும்
தற்போது அனைத்து விவசாயிகளிடமும் அதிக காய்கள் இருக்கும் பொழுது அதன் விலை குறையும் அதன் விலை குறையும்போது தக்காளி சாஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குறைந்த விலையில் அனைத்தையும் கொள்முதல் செய்யும்
இதுதான் இந்தியாவில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வாங்கி அதனைசாஸை செய்து 150 முதல் 200 வரை விற்பனை செய்வார்கள் இதுதான் தக்காளி அரசியல்
இதேபோன்று அரசியல்தான் வெங்காயத்தில் சற்று மாற்றி செயல்படுகிறது விதைகளில் அல்ல வியாபாரத்தில்
சூழ்ச்சிகளை உடைப்போம் விவசாயிகளின் நலன் கருதி வெளியிடுவோர்
பன்னாட்டு விதை நிறுவனங்கள் விதைகளை புறக்கணிப்போம் நாட்டு விதைகளை பயன்படுத்தும் நலமோடு வாழ முயற்சிப்போம்
Comments are closed, but trackbacks and pingbacks are open.