தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு ஒரு தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது நடிகராகவும் வில்லனாகவும் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், சினிமாவில் திறமை இருக்கும் பழைய இயக்குனர்களுக்கு இவர் வாய்ப்பு கொடுத்து வருகின்றார்.
அந்த வகையில் இரண்டு அடுத்தடுத்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குனருக்கு தயங்காமல் மீண்டும் ஒரு வாய்ப்பு அவர் கொடுத்துள்ளார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன். இந்த இரண்டு திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் எனக்கு பெரியளவு ரசிகர்களை கவிழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் பொன்ராம் என்பவர்.
அதன் பிறகு இவர் சீமராஜா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை கொடுக்கவில்லை தோல்வியை தான் கொடுத்துள்ளது. அதன் காரணமாக சிவகார்த்திகேயன் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயங்கி வருகின்றார். முன்பாக இரண்டு நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்துவிட்டு
ஒரு படம் தோல்வியை கொடுத்த காரணத்தினால் இயக்குனரை சிவகார்த்திகேயன் ஒதுக்கி வருகின்றார். மேலும், அவர் நன்றியை மறந்து விட்டார் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியானது…