வயல்வெளிகளில், ஒதுக்குப்புறத்தில் கு டி ப்பவர்களுக்கான பதிவு இது…. இந்த விவசாயி சொல்லும் வார்த்தையை கேளுங்க..!
உழுவதற்கு விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். அந்த அளவுக்கு விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வளவு ஏன் விவசாயிகள் காலில் செருப்புடன் கூட வயலில் கால் வைக்க மாட்டார்கள்.ஆனால் சாலையோரம் இருக்கும் டாஸ்மாக் கடையில் இருந்து பாட்டில் வாங்கிக்கொள்ளும் குடிமக்கள் சாலையோரம் இருக்கும் வயல்வெளிக்குள் புகுந்துவிடுகின்றனர். கு டித்துவிட்டு காலிபாட்டில்களை அங்கேயே வாய்க்காலுக்குள் தூக்கியும் வீசுகின்றனர். இதைப்பற்றி ஒரு விவசாயி உருக்கமாக பேசியிருக்கிறார். அதில், ‘குடித்தால் வாய்க்கால்களில் பாட்டிலை தூக்கி வீசாதீர்கள்.
அது அப்படியே வயலுக்குள் வந்துவிடுகிறது. டிராக்டர் வைத்து உழவு ஓட்டும்போது அது விவசாயிகள் நாற்றுஎநடவு போன்ற பணிக்கு வரும்போது காலில் குத்தி விடுகிறது.இதோ இன்று என் காலிலும் கூட அப்படித்தான் குத்தியது. விவசாயிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
என்று சொன்னவர் தனக்கு வெட்டுப்பட்டதையும் காட்டுகிறார். இந்த வீடியோவை இதுவரை 35 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இனிமேல் கு டி ப்பவர்கள் இந்த தப்பை செய்யவே கூடாது என சொல்ல வைக்கும் காணொலி இதோ.