கணவன் இறந்த சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த 30 வயது மனைவி செய்த செயல்! அ தி ர் ச்சியில் உறைந்த உறவினர்கள்

0 457

தமிழகத்தில் கணவன் மர்மமாக உ யி ரி ழந்த நிலையில் மனைவி, வீட்டில் இருந்த நகைகளை அள்ளி சென்ற சம்பவம் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடியை சேர்ந்த பழனிவேல் ராஜா (32) என்பவருக்கும், சாந்தாதேவி (30) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமாகியுள்ளது.திருமணமான பிறகு இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ருதன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.பழனிவேல் சித்தாலப்பாக்கம் சந்திப்பில் மளிகை கடையை சொந்தமாக நடத்தி வருகிறார்.திருமணம் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் புதிதாக வீடு கட்டியதற்காக இவருக்கு சுமார் 50 லட்சம் கடன் உள்ளதாக தெரிவித்தனர்.மளிகை கடையில் வரும் வருமானத்தை வைத்து பழனிவேல் ராஜா வாங்கிய கடனை சிறுக சிறுக அடைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பழனிவேல் ராஜாவுடன் மனைவி சாந்தாதேவி ச ண் டை யிட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில் பழனிவேல் ராஜா மர்மமான முறையில் தூ க் கில் சடலமாக தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து விசாரித்த பொலிசார் சாந்தாதேவிக்கு சாதகமாக நடப்பதாக பழனிவேலின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.மேலும் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து பழனிவேல் ராஜா குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையில் பழனிவேல் ராஜா இறந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு பால் பாட்டில் எடுக்க வேண்டும் என கூறிய சாந்தாதேவி, பொலிசார் பாதுகாப்புடன் வீட்டில் நுழைந்து வீட்டில் வைத்திருந்த அனைத்து தங்க நகைககளையும் எடுத்து சென்றது தங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததாக பழனிவேல் ராஜாவின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.