பணக்கார பெண்களை குறி வைத்து கணவன்-மனைவி சேர்ந்து செய்து வந்த பித்தலாட்டம்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

0 226

தமிழகத்தில் வசதியான பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட தம்பதியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். 27 வயதாகும் இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். மாணிக்கம் மோசடி வேலையில் இறங்கியதால், கயல்விழியும் கணவர் வழியிலே இறங்கினார்.இந்த தம்பதி வசதியான பெண்களை வலை வீசி தேடி, அவர்களிடம் 24 கேரட் தங்க கட்டிகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாகவும், சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலையில் அந்த தங்க கட்டிகளை வாங்கி வந்ததாகவும் கூறியதால், இவர்களிடம் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர்.அதன் பலனாக தம்பதி இருவரும் 30 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்துவிட்டனர்.

பணம் இல்லாதவர்கள், நகைகளாகவும் தரலாம் என்று இவர்களே ஒரு ஆபர் தந்ததால், அடகுக்கடையில் வேலை பார்க்கும் அகில் என்பவரிடத்தில் அந்த நகையை கொண்டு போய் தர சொல்லி உள்ளனர்.குறித்த பெண்களும், அகிலிடம் கிட்டத்தட்ட 500 பவுனுக்கு மேல் தந்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதி தந்துள்ளனர்.

பிறகு ஒருநாள், மாணிக்கம், கயல்விழி, அகில் 3 பேருமே தங்கம், பணத்துடன் மதுரைக்கு தப்பியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்துள்ளது,பிறகு மதுரையிலும் இதுபோலவே மோசடி செய்து பலரை ஏமாற்றி, அங்கிருந்தும் தப்பிவிட, இறுதியில் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் தர ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து, காரைக்குடி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, கயல்விழி தம்பதியினரை தேடினர். சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி கோயமுத்தூர் ஒண்டிப்புதூரில் பதுங்கி இருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அததன்பேரில் கோவை சென்ற காரைக்குடி பொலிசார் பதுங்கியிருந்த ஜோடியை கைது செய்தனர். ஆனால் அகில் அங்கு இல்லாததால், பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.