தமிழகத்தில் பிறந்து 15 நாட்களேயான பச்சிளம் குழந்தையை விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.சேலத்தின் கரியபெருமாள் கரடு பகுதியை சேர்ந்தவர் விஜய், இவரது மனைவி சத்யா, இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சத்யா மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.இதனால் தற்போது பிறந்த குழந்தையை விற்க விஜய் முடிவெடுத்தார், இதை சத்யாவிடம் கூற அவரோ அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், சத்யாவுக்கு தெரியாமல் குழந்தையை ஒரு லட்சத்துக்கு
விஜய் குழந்தையை விற்றதை அறிந்த மனைவி சத்யா கணவரிடத்தில் சண்டையிட்டு வந்தார். ‘தயவு செய்து வெளியே கூறி விடாதே’ என்று சத்யாவை விஜய் சமாதானம் செய்து வந்துள்ளார்.இதற்கிடையே குழந்தையின் நினைவாக இருந்த சத்யா, ஒருகட்டத்தில் கதறி அழுதார், உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து விசாரிக்க, குழந்தையை விஜய் விற்றதை அவர்களிடம் கூறியுள்ளார்.
உடனடியான போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விஜய்யிடம் வந்து விசாரணை நடத்தினர், விசாரணையில் கோமதி என்பவரின் உதவியுடன் நிஷாவுக்கு விஜய் குழந்தையை விற்றது தெரிய வந்தது.இதனைதொடர்ந்து, நிஷா, கோமதி மற்றும் விஜய்யை போலீஸார் கைது செய்தனர்.