நேற்று காலை சின்னத்திரை நடிகை சித்ரா பிரபல சொகுசு ஹோட்டலில் தூ க் கு மாட்டி த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை மிகவும் மும்முரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ரா சொகுசு ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பிற்கு சென்று, மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி வந்த சிசிடிவி காட்சிகள் போலீஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் சிசிடிவி கமெராக்கள் அங்கு வேலைசெய்யவில்லை என்று மற்றொரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஹோட்டலின் மேனஜர் கணேசனிடம் கேட்ட பொழுது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாராம்.
அதனால் அவருடன் 3 நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், சித்ரா கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டபோது, ஹேமந்த்தும், கணேசனும் மற்றொரு சாவி கொண்டு திறந்து உள்ளே போனதாக சொல்லி உள்ளனர். ஆனால், சித்ரா தங்கியிருக்கும் ரூமுக்கு சாவி கிடையாதாம். வெறும் ரூம் கார்டு மட்டும் தான்.
அந்த ரூம் கதவும் ஆட்டோமெடிக்காக லாக் என்று சொல்லும், தானாகவே மூடிக் கொள்ளக்கூடியது. ஆனால், சித்ராதான் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதாக ஹேமந்த் சொல்கிறாராம்.. இதுவும் குழப்பமாக இருந்து வந்தநிலையில், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.