மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மாதங்களுக்கு முன்பு இளம் தம்பதிகளுக்கு திருமணம் நடைப்பெற்றது.அதன்பின்னர், இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், மனைவிக்கு கணவரிடம் இருந்து உடல் ரீதியான எந்த இன்பத்தையும் கொடுக்காமல் இருந்துள்ளார்.இதனால், மனமுடைந்துபோன மனைவி, கணவர் இல்லற வாழ்வுக்கு தகுதியற்றவர் என்றும் தனது மாமியார் தன்னை துன்புறுத்தினார் என்றும் தெரிவித்து கோர்ட்டை நாடியுள்ளார்.மேலும், டிசம்பர் இரண்டாம் தேதி கணவரிடம் இருந்து தனக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர கோரி சட்டத்தை அணுகியுள்ளார்.அப்பொழுது, சட்ட உரிமை அமைப்பின் அதிகாரிகள் அந்த பெண்ணின் கணவரிடம் பேசிய பொழுது தனது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர் .
என்றும் எனவே தனக்கு அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் கொரோனா வந்து இருக்குமோ என்ற அச்சம் இருந்ததாகவும்,எனவே மனைவியிடமிருந்து விலகியே இருந்தேன். இல்லற வாழ்வில் எந்த விதமான பாதிப்பும் இல்லை.” என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அந்த நபருடன் வாழ பெண்ணை பேசி அனுப்பி வைத்து இருக்கின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.