மகன் உருகி, உருகி காதலித்து வந்த பெண்ணை அவனின் தந்தை திருட்டுத்தனமாக கல்யாணம் செய்த கொ டு மை தமிழகத்தில் நடந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்களே அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பக்கத்தில் உள்ளது செம்போடை கிராமம். இங்கு காய்கறிக்கடை வைத்திருக்கிறார் கருப்பு நித்யானந்தம். 45 வயதான இவருக்கு, 20 வயதில் முகேஸ் கண்ணன் என்று ஒரு மகன் உள்ளார். முகேஸ் ஐடிஐ படிக்கும்போதே தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதல் செய்தார். இருவரும் படிப்பை முடித்துவிட்டு ஒரே கம்பெனியிலும் வேலை செய்துவந்தனர்.இவர்கள் காதல் விவகாரம் முகேஸின் தந்தை நித்யானந்தத்திற்கு தெரியவர, குறித்த அந்த பெண்ணை வீட்டுக்கே போய் அழைத்து வந்து, உன்னோடு கல்யாணம் செய்து வைக்கிறேன் எனச் சொல்லி பெண் வீட்டிற்கு போனார்.
அந்த பெண்ணும் தன் மாமனார் தானே அழைக்கிறார் என நம்பிப் போனார். ஆனால் வீட்டில் இருந்து அந்த பெண்ணை கொஞ்சம் தூரம் தள்ளி அழைத்து வந்ததுமே, அந்த பெண்ணை பலவந்தமாக கட்டாயப்படுத்தி செய்து இருக்கிறார் நித்யானந்தம்.தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தாலிகட்டி அ டி த் து துன்பு று த்தி அவரிக்காடு என்னும் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்_பவுன்ராஜவள்ளி தம்பதிகளின் வீட்டில் வைத்து சி த் ரவ தை செய்ததோடு, தன்னோடு தான் வாழ வேண்டும் எனவும் கொ டுமை ப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் தன் வீட்டுக்கு போனதும், மகனிடம் நான் உன் காதலியை கூட்டிவரும்போதே அவள் வேறு ஒரு பையனோடு ஓடிவிட்டாள் எனவும் சொல்லி ஏமாற்றிவிட்டார்.ஆனால் அடுத்த சிலதினங்களில் அந்த பெண் நித்தியானந்தம் அடைத்து வைத்திருந்த வீட்டில் இருந்து தப்பித்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு போனார். அதன் பின்னரே இந்த விசயம் வெளியில் தெரிந்தது. இப்போது நித்தியானந்தமும், அவருக்கு உதவிய தம்பதிகளும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.