நம்பி ஏமாந்த நடிகர் செந்தில்… வாடகைக்குவிட்ட சொந்த கட்டிடத்தை நேரில்போய் பார்த்த அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0 360

தமிழ்த்திரையுலகில் வடிவேலுவுக்கு முன்பு நகைச்சுவை என்றாலே அனைவரும் செந்தில்_கவுண்மணி பெயரைத்தான் சொல்வார்கள். அதிலும் கவுண்டமணி வாழைப்பழம் வாங்கி வரச்சொல்லும் போது, செந்தில் கொடுக்கும் ரியாக்சனும், அதான்னே இது வசனமும் பட்டிதொட்டியெங்கும் பேமஸ்.கவுண்டமணி வயோதிகத்தின் காரணமாக நடித்துக் கொள்வதைக் குறைத்ததும், அவரோடு சேர்ந்தே காமெடி செய்த செந்திலுக்கும் பெரியதிரையில் வாய்ப்புகள் போனது. அதனால் இப்போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கி சீரியலிலும் நடித்து வருகிறார். இதேபோல் அதிமுகவிலும் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார் செந்தில்.நடிகர் செந்திலுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூம்கள் கொண்ட சொந்தக் கட்டிடம் உள்ளது.

இதை கடந்த 2013ல் சகாயராஜ் என்பவர் மாதம் 2 லட்சம் வாடகைக்கு எடுத்து சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நடந்தி வந்தார். இந்நிலையில் செந்திலிடம் வாடைக்கு வீட்டை எடுத்திருந்த சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தரவில்லை. தொடர்ந்து வாடகையை தராமல் டிமிக்கி கொடுக்கவே செந்திலுக்கு சகாயராஜ் மீது சந்தேகம் வந்தது.

இதனைத் தொடர்ந்து செந்தில் தன் கட்டிடத்தை நேரில் பார்க்கப் போனார். அப்போதுதான் செந்திலிடம் இருந்து வாடகைக்கு எடுத்திருந்த சகாயராஜ், அதில் 7 ரூம்களை தன் சொந்தக்கட்டிடம் எனச்சொல்லி லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு ஒப்பந்தம் போட்டிருப்பது தெரியவந்தது. செந்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சகாயராஜை கைது செய்தனர். இவர் சினிமாவில் புரொடெக்சன் மேனேஜராக உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.