குக்கரில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலை.. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

0 302

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. பானைக்குள் ஒரு சிறுவனின் தலை போய்விடும். அதனால் படும் அவஸ்தை நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும். அதேபோல் உண்மையிலேயே ஒரு சிறுவனின் தலை குக்கருக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கடைசியில் என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.குஜராத்தின் பவாநகரைச் சேர்ந்த பிரியன்ஷிவாலா என்ற குழந்தை கையில் குக்கரை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலையில் குக்கர் மாட்டிக்கொண்டது. அக்கம்,பக்கத்தினர் சேர்ந்து குக்கரை எடுக்க முயன்றனர். ஆனால் குழந்தைக்கு காயம்பட்டதே தவிர குக்கரை எடுக்கமுடியவில்லை.

உடனே குழந்தையின் பெற்றோர் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். . அங்கு குழந்தைகள், எலும்பு சிகிட்சை நிபுணர்கள் குழந்தைக்கு சிகிட்சை கொடுத்தனர்.ஆனால் மருத்துவர்களின் முயற்சி இதில் பலிக்கவில்லை.

கடைசியில் பாத்திரங்கள் பழுதுபார்ப்பவரை அழைத்துவந்து குக்கரை வெட்டி எடுத்தனர். குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் காயங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.