10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் டும்..டும்..டும்.. க த றிய சிறுமி…தந்தை பணத்துக்கு மயங்கிய கொடூரம்..!
அரசு குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பல விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இன்னொரு புறத்தில் அதையெல்லாம் மீறி ஆங்காங்கே குழந்தை திருமணங்களும் அரங்கேறியே வருகிறது. அது இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் கூட நடக்கிறது. அப்படியொரு சம்பவம் இப்போது அண்மையில் நடந்துள்ளது.பாகிஸ்தான் நாட்டின் ஷிகார்பூர் நகரில் வசித்து வருபவர் முகமது சோமர். 40 வயதான இவருக்கு பத்துவயது சிறுமியுடன் திருமணம் நடக்க இருந்தது. படித்துக் கொண்டிருந்த தனக்கு திருமணம் என்றதும், அந்த குழந்தையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது மணமேடையிலேயே பீறிட்டு அழுதது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திருமணத்துக்கு வந்திருந்த ஒருவர் இதுபற்றி போலீஸாருக்கு தகவல் சொன்னார்.போலீஸ் அங்கு வந்துசேரும் முன்னரே திருமணம் நடந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை மீட்ட போலீஸார், அவரை மணம் முடித்த முகமது சோமரையும் கைது செய்தனர்.
போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியின் தந்தைக்கு இரண்டரை லட்ச ரூபாய் கொடுத்து, திருமணம் செய்து வைக்கக் கேட்டதும் அம்பலமானது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய திருமண புரோக்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.என்னதான் இந்த உலகம் மாறினாலும் பல இடங்களில் இந்த மாறி குழந்தைகளுக்கு பணத்திற்காக திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதை தடுக்க எத்தனை அமைப்பு வந்தாலும் இதை தடுக்க என்ன வலி செய்வது என்று இன்னும் அறியாத சில குழந்தைகள் உள்ளனர் .இதற்க்கு குழந்தைகளிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இதை பற்றி அறிய வைக்க வேண்டும் தன்னை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை கற்று கொடுக்க வேண்டும் .