அக்கா_தங்கைக்கு இடையே இருக்கும் பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பிள்ளைகள் இருந்து அதில் சகோதிரிகளாகப் பிறந்தால் அவர்கள் சகோதிரிகள் என்பதை எல்லாம் தாண்டி தோழிகள் போலவே வாழத் துவங்கி விடுவார்கள்.அவர்களுக்குள் அந்த அளவுக்கு நெருக்கமும், பிணைப்பும் இருக்கும். அதனால் தான் நம்மால் அக்கா_தங்கை பாசத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. அக்காக்கள் தங்கைகளுக்கு பல நேரங்களில் அம்மாவாகவும் ஆகிவிடுகிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டாலும் தன் தங்கையை குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தாய் என்றே அக்காவைச் சொல்லலாம்.இங்கேயும் அப்படித்தான். தன் அக்காவுக்கு கல்யாணம் நடக்கிறது.
அந்த கல்யாணம் முடிந்து அக்கா, தன் கணவரின் இல்லத்துக்கு செல்லும்போது, தங்கை கதறி அழுகிறார். அதைப் பார்த்து மணப்பெண்ணான அவரது அக்காவும் அழுகிறார். இந்த பாசத்துக்கு முன்பு எத்தனைக் கோடி கொட்டிக் கொடுத்தாலும் ஒன்றுமே இல்லை.
இதேபோல் உங்கள் வாழ்விலும் யோசித்துப் பாருங்கள். தங்கைகளோடு பிறந்த அக்காக்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொக்கிஷ தருணம் இது! இதோ வீடியோ இணைப்பு..பாருங்கள்.