தற்போது வரலாற்றில் புனைவுகளும் தொன்மங்களும் வரலாறு என்று இணைக்கப்படுவதால், நாம் வரலாற்றை ஒரு மாறுநிலைக் கோணத்துடனே அணுக வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் வரலாற்றில் வீரமங்கைகள் என்று போற்றப்படுவரை தவிர்த்து, தரவுகளின் அடிப்படையில், கண்கூடான மாற்றங்களின் அடிப்படையில் என் பார்வையில் வரலாறுப் படைத்த பெண்கள்:
மருத்துவர் முத்துலஷ்மி ரெட்டி:
பெண் உரிமை தன்னார்வலர், சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், ஆண்டாண்டு காலமாக இருந்த தேவதாசி முறையை ஒழித்த சமூகப் போராளி – இவை அனைத்தையும் அவர் செய்தது 1920-களில்.
தேவதாசி பணி செய்து எங்கள் வீட்டு பெண்கள் களைத்து விட்டார்கள். வேண்டுமென்றால் உங்கள் வீட்டு பெண்களை அனுப்புங்கள் என்று கூறி சத்தியமூர்த்தி அவர்களின் வாயை அடைத்தவர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
முத்துலெட்சுமி ரெட்டி அவர்களுடன் இணைந்து தேவதாசி முறை ஒழிய காரணமானவர். இந்தி திணிப்பை 30-களில் எதிர்த்தவர்களில் முக்கியமானவர்.
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களின் நில உரிமைக்காக அயராது உழைத்தவர். கீழ்வெண்மணி படுகொலையால் பாதிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டவர்கள் நில உரிமைக்காக போராடியவர். ‘உழுபவனின் உரிமை இயக்கம்’ தொடங்கி இதன் மூலம் 13,500 பெண்களுக்கு நிலம் வர வழி செய்தவர்.
இளைய தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத வரலாற்றுப் பெண்கள் இவர்கள்.
மஹாராஷ்ட்ரத்தின் சாவித்திரி பாய் புலேவும் நினைவிற்கு வருகிறார்.