அரிசியானது அடு மணலுடன் சேர்த்து இரும்பு அல்லது மண் சட்டியில் சூடு செய்யப்படும். நன்றாக கலக்கும்போது அரிசியானது வெடித்து உப்ப ஆரம்பிக்கும்.
மணலுடன் சேர்ந்த அரிசியை சலித்து பிரிக்கவேண்டும். புழுங்கல் அரிசி பயன்படுத்தி தயார் செய்யும்போது சாம்பல் நிறத்திலிருந்து தூய வெள்ளை நிறம் பெறலாம்.
இது விற்கும்போது உப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் விற்கப்படுகிறது. இது சாப்பிடும்போது மோர் அல்லது பால் சேர்க்கலாம்.
பொரி
பொரியானது பண்டைய காலந்தொட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் எளிய உணவாகும். இதனுடன் வெல்லம்,
பொரிகடலை துருவிய காய்கறிகள் மற்றும் மசாலா வகைகள் சேர்த்தும் சாப்பிடலாம்.
பொரியானது பெரும்பாலும் வீட்டிலும் அல்லது சிறு தொழிலாகவும் சிறந்த வல்லுணர்களால் தயாரிக்கப்படுகிறது.
பழமையான முறையில் நெல்லானது ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து (தழும்பும் வரையும்) நீர் வடிக்கப்பட்டு ஆவியில் வேக வைத்து அல்லது வறுக்கப்படுகிறது.
மணலினால் (புழுங்கல் வைப்பதற்காக) புழுங்க வைத்த நெல்லானது அரைக்கப்பட்டு, உப்பு சேர்க்கப்பட்டு மணல்சேர்த்து அரிசி உப்பும் வரை வறுக்கப்படுகிறது.