கம ல் சா ர் என் பட த் தை பார் த்து வி ட்டு அ ரை ம ணி நேர ம் அழு தார்..!! அப் போ திலி ருந்து அ டி க்கடி என க்கு போ ன் செய் வார் ..!! வெளி ப்ப டை யாக கூ றிய பிர பல முன் ன ணி இய க்குன ர் ..!!

0 140

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குனர் பிரபு சாலமன் . ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிங் ,லீ  ,லாடம் போன்ற பல படங்களை இயக்கிய வந்தாலும் இவரை ரசிகர் மத்தியில் பெரிதும் பிரபலமாக்கியது,

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படம் வெளியாகி பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது . இதன் பிறகு கும்கி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் அங்கீகாரத்தை பெற்று இருந்தது.  இதையடுத்து தற்போது செம்பி  என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் .

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் பிரபுசாலமன் கூறியதாவது,  நடிகர் கரணை வைத்து கொக்கி என்ற திரைப்படத்தை இயக்கினேன்.  கமலஹாசனும் கரணும். நெருங்கிய நண்பர்கள், அதனால் அந்த படத்தின் ஆடியோ லான்ச்க்கு கமல் சாரை  அழைத்திருந்தேன்.

அப்போது கமல்ஹாசனுடன் அறிமுகம் பெரிய அளவில் கிடையாது .அதனால் கை மட்டும் தான் குலுக்கினேன்.  பின்னர் சில வருடங்கள் கழித்து மைனா படத்தின் ஆடியோ லான்ச்க்கு அழைத்திருந்தேன். ஆனால் அவரோ படத்தை பார்த்துவிட்டு தான் வருவேன் என்று கூறினார் .

இதனால் அவர் படத்தை பார்ப்பதற்கான வேலைகளை செய்தேன் . படத்தை பார்த்து விட்டு கண் கலங்கிய படியே வெளியே வந்தார் . இதன்  பிறகு அரை மணி நேரம் என்னை சந்தித்து பேசினார் . இதையடுத்து கமல்ஹாசன் மைனா படத்தின் ஆடியோ லான்ச்சில் படத்தை பார்த்துவிட்டு இரண்டு நாட்கள்,

நான் தூங்கவே இல்லை என்று கூறினார். அதிலிருந்து கமல் சார் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவது வழக்கம் . மேலும் அவரை வைத்து கூட ஒரு படம் பண்ண இருந்தேன் . ஒரு சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போய்விட்டது . விரைவில் கமல் சாரை வைத்து ஒரு படத்தை பண்ணுவேன் என்றும் கூறியிருந்தார் இயக்குனர் பிரபு சாலமன்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.