லிஃப்டில் சிறுவனின் கழுத்தில் இ றுகிய கயிறு.. துணிச்சலாக செயல்பட்ட சிறுமி.. நெஞ்ச ப தபதக்க வைக்கும் காட்சி..!

0 131

இன்றைய சமூகத்தில் சிசிடிவி கெமராக்கள் உலகில் அனைத்து கு ற்றங்களையும் தடுக்க பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. குற்றவாளிகளைக் பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் எளிதாகிறது.இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், தினமும் நடக்கும் சாலை வி பத்துகளின் கோரக் காட்சிகள், தற்செயலாக நடக்கும் அற்புதங்களின் காட்சிகள் போன்றவையும் இணையத்தில் வைரலாகிறது.இப்படி வெளியான ஒரு சிசிடிவி காட்சி ஒன்று தான் மனதை பதைபதைக்க வைத்துள்ளது. வீடியோவின் ஆரம்பத்தில் அ திர்ச்சியை ஏற்படுத்தினாலும் கடைசியில் ஆறுதலடைய செய்துள்ளது.துருக்கியில் சிறுமி ஒருவர் லிஃட்டிக்குள் உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டு சிறுவர்கள், லிஃப்டுக்குள் வருகிறார்கள். அதில் ஒரு சிறுவன் கையில் கயிற்றை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். அடுத்த சில வினாடிகளில் லிஃப்ட் மேலே செல்கிறது. அப்போது சிறுவனின் கையிலிருந்த கயிறு லிஃப்ட் கதவில் சிக்கி அதன் மறுமுனை சிறுவனின் கழுத்தை இறுக்கி லிஃப்டின் மேலே தூ க்கி நிறுத்துகிறது.

இதைக் கண்ட அருகிலிருந்த சிறுமிகளில் ஒருவர், பதறாமல் ஒரு கையில் சிறுவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு மறு கையில் லிஃப்ட் பட்டனை அழுத்தி கயிற்றின் அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்கிறார். பின்னர் வேகமாக, கழுத்தில் சிக்கிய கயிற்றை எடுக்க முயல்கிறார். இறுதியில் கயிறு கீழே இறங்குகிறது. அப்போது வேகமாகச் சிறுவனை அதிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றி விடுகிறார்.

இதைத்தொடர்ந்து குழந்தைகளை எப்படி தனியாக லிஃப்டில் செல்ல அனுமதித்தனர். அந்தச் சிறுமி துரிதமாகச் செயல்பட்டுள்ளார். போன்ற பல்வேறு கருத்துகள் சமூகவலைதளத்தை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.