பூரான் கடித்தால் நாம் இறந்துவிடுவோமா..? சிகிச்சை முறைகள்தான் என்ன..?

0 1,203

பூரான்:

ஐந்து வகை விஷங்களில் பூரானும் ஒன்று. இதை ஆயிரங்கால் பூச்சி என்றும் சொல்வதுண்டு.

இதன் பக்கவாட்டில் எண்ணற்ற கால்கள் இருக்கும். பூரான் கடிப்பதால் வலி தெரிவதில்லை. பூரான் கடித்தால் உடம்பெல்லாம் நீண்ட தடிப்புகள் உண்டாகும். சில நாட்களில் நீண்ட தடிப்புகள் தானாகவே மறைந்துபோகும்.

ஆனால் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மீண்டும் அந்த தடிப்புகள் தோன்றும்.

குப்பைமேனி

மஞ்சள்

உப்பு

தேவையான பொருள்கள்:

குப்பைமேனி இலைஉப்புமஞ்சள்வெற்றிலை சாறுமிளகு

சிகிச்சை:

குப்பைமேனி இலையையும், உப்பையும் சமமாக வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் இதனை பூசி விட்டு நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

உடல்முழுவதும் தடிப்பு காணப்பட்டால் இதனை உடல்முழுவதும் பூசி குளிக்க வேண்டும்.100 மிலி வெற்றிலை சாற்றில் 35 கிராம் மிளகு சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சீசாவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் பூரான் விஷம் குணமாகும்.ஆனால் புளி, நல்லெண்ணெய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.